Pages

Sunday, December 23, 2007

உங்களுடன்: பட்டா

theekkathir.in

பட்டா



சென்னை, 18 டிச. 2007

நீர்வரத்தில்லாத நீர் நிலைப் பகுதிகளில் குடியிருக் கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் கோரி கொட்டும் மழையில் குடையைப் பிடித்துக் கொண்டு பல்லாயிரக் கணக்கான மக்கள் அண்மையில் சென்னையில் பேரணி நடத்தினர்.

சென்னை புறநகர் பகுதி யில் உள்ள கொரட்டூர் ஏரி, திருவேற்காடு ஏரி, பல்லாவரம் பெரிய ஏரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது.ஏரி அதைச் சார்ந்த மேட்டு பகுதிகளில் குடியிருக்கும் மக் கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசிக்கின்றனர். அவர்களுக்கு மின் இணைப்பு, சாலை, ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை அரசு வழங்கியுள்ளது.

மேற்கண்ட ஏரிகள் குடிநீ ருக்காக இதுவரை பயன்படுத் தப்படவில்லை. இந்த ஏரிகளின் மண் வளத்தை பரிசோதித்ததில் குடிநீருக்கு பயன்படுத்த முடியாது என்பது நிருபனமாகி உள்ளது.இந்நிலையில் இப்பகுதி மக்களிடம் பேசியதிலிருந்து...."ஏரிப்பகுதியில் வசிக்கின்ற நாங்கள் யாரும் நிலங்களை ஆக்கிரமிக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருப தாயிரம் ரூபாய் கொடுத்து அரசியல்வாதிகளிடமிருந்து வாங்கியுள்ளோம். இதற்கான பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத ஆவணகங்கள் எங்களிடம் உள்ளது.

எங்களை அகற்றுவதற்கு முன்பு நிலத்தை விற்றவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரடு முரடாகக் கிடந்த இந் தப் பகுதியை காலம் முழுவ தும் நாங்கள் உழைத்து கிடைத்தவற்றை கொண்டு மேம்படுத்தி வீடு கட்டியுள்ளோம்.நீர்நிலைப் பகுதிகளில் தற்போது குடியிருக்கும் பகுதியைத் தவிர்த்து எஞ்சி யுள்ள நீர் பிடிப்புப் பகுதிக ளில், இனி எவ்வித ஆக்கிரமிப் பும் நடைபெறாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து சிபிஎம் தலைவர்களிடம் பேசியதிலிருந்து.....நீர்நிலைப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை எவ்வித பாராபட்சமுமின்றி முறையாக பதிவு செய்ய வேண்டும். இனிமேலும் எந்த ஒரு குடியிருப்பும் நீர்நிலைப் பகுதியில் அமையாமல் தடுப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுப்பதுடன், மேற்கண்ட அரசுத்துறை அதிகாரிகளும் உடந்தை என கருதப் பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியிருப்புகளுக்கு இடை யில் காலி இடம் இருக்குமேயானால் வட்டாட்சியர் மூலம் அதனை கையகப்படுத்தி பள்ளி, மருத்துவமனை, விளை யாட்டு திடல் போன்ற பொது வான பயன்பாட்டிற்கு பயன்ப டுத்த வேண்டும் என்றனர்.அரசு விரைவில் நிலத்தை வகைமாற்றம் செய்து பட்டா வழங்குமா?

வரலாறான புறக்கணிப்பு


வரலாறான புறக்கணிப்பு

சில நேரங்களில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிகழ்வுகள் நடப்பதுண்டு. அப்படித்தான் உலக மனித உரிமை தினமான 2007 டிச.10 அன்று மும்பையில் ஒரு வர லாற்று நிகழ்வு நடைபெற்றது.

நாள்தோறும் 15லட்சம் மக்கள் பயணம் செய்யும் அந்த மும்பை புறநகர் ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். நெரிசல் நேரத்தில் ஒரு சதுர மீட்டரில் 17-18 பேர் மூச்சுத் திணறலோடு ஒரு மணி நேரம் ஒற்றைக் காலில் நின்று தவமிருப்பது போல் பயணம் செய்வார்கள். எஞ்சியவர்கள் வெளவால்களாய் படிகளில் தொங்கியபடி பயணம்தான். இதனால் இந்த வழித்தடத்தில் ஆண்டு தோறும் 1000 பேராவது கீழே விழுந்து இறந்து போவது தொடர்கதையாய் இருக்கிறது.

மும்பையின் புறநகரான விரார்-சர்ச்கேட் மார்க்கத் தில் போதிய அளவு ரயில்களை இயக்காமல் மனிதாபி மான மற்ற முறையில் பயணிகளை ரயில்வே நிர்வாகம் நடத்தியதுதான் இத்தனைக்கும் காரணம்.இதற்கு தீர்வே இல்லையா? எப்போது இந்த கொடுமை தீரும்? யார் நடவடிக்கை எடுப் பது? மக்களை நேசிக்கும் வாலிபர் சங்கம் அங்கு வந்து நின்றது.

“பயணிகளை விலங்குக ளாக நடத்தாதே” என்று முழக் கத்தை முன்வைத்து 2004 நவம்பர் மாதத்தில் வாலிபர் சங்கம் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 20ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர். இதனை ரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத்திடம் வாலிபர் சங்கம் வழங்கியது.

“பயணம் எங்கள் உரிமை” என்று கூறி 2005 டிச.10 அன்று சத்தியாகிரகப் போராட்டம் நடத்த வாலிபர் சங்கம் விடுத்த அழைப்பை ஏற்று ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சிபிஎம் மும்பை கமிட்டி உறுப்பினர் கே.கே. பிரகாசன், வேணுகோபால் உள்ளிட்டு 12 வாலிபர் சங்க ஊழியர்கள் மற்றும் அந்த வழியே சென்ற 3 பெண்கள் உள்பட 18 பேர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசாரின் இந்த மிருக தாக்குதலையடுத்து கலாச்சார அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், அப்பகுதியில் செயல்படும் அரசியல் கட்சி கள், அமைப்புகள் உள்ளிட்ட வைகளை இணைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தலைமையில் ப்பர்வாஸ் ஆதி கார் அந்தோலன் சமிதி (பாஸ்) அமைக்கப்பட்டது. அதன் கன்வீனராக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் சைலேந்திர கேம்பல்.

2006 டிச.10 அன்று யெச்சூரி கொடியசைத்து துவக்கி வைக்க வாலிபர் சங்கத்தினர் 12 கிலோ மீட்டர் தூரம் கண்டன பேரணியை நடத்தினர். மக்களின் மனக் குமுறலையும், கோபாவேசத்தையும், துன்ப துயரத்தையும் ஒருமுகப்படுத்திய வாலிபர் சங்கமும், பாஸ் அமைப்பும் “விரார் பகுதிக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு ரயில் விட வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து டிச.10 அன்று ரயில் புறக்க ணிப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன. அந்தப் பகுதியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஆதரவளித்தன.


ரயில்கள், பிளாட்பாரங்கள், வீதிகள் தோறும் சென்று 50 லட்சம் துண்டு பிரசுரங்கள் மக்களிடையே விநியோகித்தனர். போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு அலை பெருகியது. போராட்டத்தை சீர்குலைக்க டிச.10 அன்று 20 கூடுதல் சர்வீசை இயக்குவதாக நிர்வாகம் அறிவித்தது. பயணத்தில் வாடி வதங்கி கந்தலாகிப் போன மக்கள் இதனை ஏற்கவில்லை. சைலேந்திர கேம்பல், பிரகாசன் மற்றும் வாலிபர் சங்க ஊழியர்கள் மீது காவல் துறையினர் அவதூறுப் பிரச்சாரம் செய்தனர். இதற்கும் மக்கள் பலியாகவில்லை.

விடிந்தது டிச.10. விரார்-சர்ச்கேட் மார்க்கத்தில், விரார்-தகிசார் இடையே ஓடும் ரயிலில் ஏற காலை 6 மணி முதல் ஒருவர் கூட வரவில்லை. மாலை 6 மணி வரை இதே நிலைமை நீடித்தது. 12கிலோ மீட்டர் தூரம் மீண்டும் மீண்டும் காலியாக, கதவுகள் மூடிய படியே ரயில்கள் ஓடின. அதிர்ந்தது ரயில்வே நிர்வாகம். ஒரு பயணியைக் கூட பார்க்க முடியவில்லை. பயணிகளின் சத்தத்தை கேட்க முடியவில்லை என்று கூறி கதவு மூடிய காலி ரயில்களையும், பிளாட் பாரங்களையும் மீண்டும் மீண்டும் காட்டி போராட்டம் வெற்றி என்பதை மின்னணு ஊடகங்கள் படம் பிடித்தன.


இந்த நிலையிலும் மாநில முதலமைச்சர் விலாஷ் ராவ் தேஷ்முக், 15லட்சம் சாதாரண பயணிகளை பற்றி கவலைப் படாமல், மும்பையில் ஏசி ரயில் இயக்க வேண்டுமென்று தான் ரயில்வே அமைச்சரை கேட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் மகாராஷ்ட்ரா அரசின் உண்மையான முகம்.

டிச.10 உலக மனித உரிமை நாளில் ‘பயணம் உங்கள் உரிமை’ என்பதற்கான புறக்கணிப்பு போராட்டம் புதிய வரலாற்றை ஏற்படுத்தியது.-


தகவல்: பீப்பிள்° டெமாக்ரஸி

Thursday, August 16, 2007

`தின(திணிப்பு)மணி’ யின் வர்க்க பாசம்

`பதவி உயர்வு வழங்குவது போல் தண்டனை கொடுப்பது’ படிப்பதே வேடிக்கையாக இருக்கிறதல்லவா?
அப்படிதான் தின (திணிப்பு)மணியின் செய்திகளும் உள்ளன.
இந்துத்துவா வாதிகளின் கையில் சிக்குண்டு திணிப்புமணியாகி போன தினமணி, மத்திய அரசை எதிர்த்து, மாநில அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட்டுகள் போராட்டம் நடத்தினால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பெரிதாக போடுவதை நடுநிலை என்று வைத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் இவர்களின் போராட்டம் இரட்டை வேடம் என்று கட்டுரை எழுதுவதை என்னவென்று எடுத்துக் கொள்ளவது.
மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் பல்லாயிரக்கணக்கான அருந்ததிய மக்கள் ஒன்று திரண்டு சென்னையில் பேரணி நடத்தினார்கள். தமிழகத்தில் முதன்முறையாக சாதி இயக்கங்களே கண்டுகொள்ளாத அருந்ததி மக்களை ஒன்று திரட்டி, மாநாடுகள் நடத்தி, வர்க்கப் போர்முனைக்கு அழைத்து வந்து, உரிமைக்காக போராடினால், இதன்மீதான நியாயத்தை புரிந்து கொள்ளாமல், மனு சிந்தனையோடு தினமணி ஒருகாலம் படம் போட்டுவிட்டு செய்தியே போடவில்லை.
தினப்புளுகு ஏடும் இதே பணியையே பின்பற்றியது. ஆனால், விஞ்ஞானத்திற்கு புறம்பாக ராமர் பாலம் உள்ளதாகவும், அதனை இடிக்க கூடாது என்றும் மதவெறியர்கள் சென்னையில் உண்ணாவிரதமிருந்தால் அதனை பெரிதாக போடுகிறார்கள்.
என்னே! இவர்களின் சமூக முற்போக்கும், நடுநிலைமையும் நினைத்தால் வெட்கமடைய செய்கிறது.முதலாளித்துவ ஏடுகள் சமூக பிரச்சனைகளில் சிலவற்றில் சில நேரங்களில் நியாயமாக நடந்து கொண்டாலும், வர்க்கப் போராட்டங்களுக்கு எப்போதும் எதிராகவே உள்ளன.

பூனைக்குட்டி வெளியே வந்தது

“குந்த குடிசையில்ல நாய் பேசற பேச்சை பாரு” என்று பரவலாக நகர்ப்புறங்களில் பேசக் கேட்டிருப்போம்.
நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத குடும்பங்கள் லட்சக்கணக்கில் உள்ளன. இவர்கள் அனைவரும் பிழைப்பு தேடி வந்தவர்களே. உயிரை பணையமாக வைத்து, ரத்தத்தை சிந்தி உழைத்து, வாய்வயிற்றைக் கட்டி சிறுகசிறுக சேர்த்து வைத்தப் பணத்தில் ரியல் எஸ்டேட் முதலைகளிடம் கொட்டி இடம் வாங்குகிறார்கள். அந்த இடம் கண்டிப்பாக பட்டா நிலமாக இருக்க வாய்ப்பில்லை.
குந்த சொந்தமாக ஒரு குடிசையாவது வேண்டுமென்ற உந்துதலில், ஆளும் கட்சிகாரர்கள் மடக்கி வைத்துள்ள நிலத்தை வாங்கிக் கொள்கிறார்கள். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் புறம்போக்கு நிலத்திற்கு ஏகப்பட்ட விலையை சொல்லி ரியல்எஸ்டேட் முதலைகள் கொள்ளையடிக்கிறார்கள். அதிகாரிகளும் தங்களுக்கு சேரவேண்டிய பங்கு வந்து சேர்ந்தவுடன் ஏழை மக்கள் மீது கரிசனம் உள்ளவர்கள்போல், தெரு, மின்விளக்கு, குடிநீர் என அடிப்படை வசதிகளை ஓரளவிற்கு செய்து கொடுக்கிறார்கள். ஆனால் பட்டா மட்டும் தர மறுக்கிறார்கள்.
இதற்கு அதிகாரிகள் கூறுவதை கேட்டால் வாயல் சிரிக்க முடியாது. “ சார், அந்த இடம் நீர்வழிப்புறம்போக்கு சார். இந்த இடம் வாய்க்கால் புறம்போக்கு சார், அந்த இடம் சொல்றீங்க பாருங்க அதுவந்து ஏரி புறம்போக்கு சார், அது கோயில் நிலம், அதுல எப்படி சார் பட்டா கொடுக்க முடியும். நீங்களே சொல்லுங்க? ஆக்கிரமிச்சு வைச்சியிருக்கானுங்க,” என்பார்கள். இதுதான் அதிகாரத்தில் உள்ள எடிபிடிகளின் குரலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
`தனக்கு கீழே ஒருவன் எப்போதும் இருக்க வேண்டும். அவன் எனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற சாரம்சத்தில்தான் தமிழக சாதி கட்டமைப்பு உள்ளது. இந்த ஆதிக்க சாதி வெறிப்பிடித்த, சாதி வெறிகளுக்கு அடிநாதமாக உள்ள மனுதர்மத்தை கடைபிடிக்கும் இந்துதுவா வாதிகளின் கையில் தற்போது `தினமணி’ நாளேடு உள்ளது.
இந்த மதவாதிகளின் வஞ்சக குரலாக `தினமணி’யில் வியாழனன்று (ஆக.16) நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக நிலப் போராட்டம் உள்ளது என்ற தோனியில் செய்தி வந்துள்ளது. இது ஏதோ சாதாரணமான செய்தி அல்ல. மனுதர்மத்தின் வெளிப்பாடு. மனுதர்மத்தை கடைபிடிக்கும் பாப்பான், தான் கூறவந்ததை எப்போதுமே நேரடியாக கூறாமல், நடுநிலையாக கூறுவதுபோல், வஞ்சகம் செய்வான். அப்படிதான் இந்த செய்தியைப் பார்க்க வேண்டும். இத்தகைய கருத்துக்களுக்கு நடுத்தர வர்க்கத்தினர் எப்போதும் ஆட்பட்டுவிடுவார்கள். அவர்களுக்கு தொழிலாளி வர்க்கத்தின் வலியும் தெரியாது, முதலாளிகளின் சூழ்ச்சியும் புரியாது. கண்கெட்ட பிறகு சூரியனை கும்பிடும் அதிபுத்திசாலிகள் இவர்கள்.
குடிமனைப்பட்டா இல்லா மக்களை அணிதிரட்டி குடிமனைப்பட்டா வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் சென்னையில் மட்டும் 10 வட்டாட்சியர் அலுவலங்கள் முன்பு நடத்திய போராட்டங்களில் 25ஆயிரத்திற்கும் அதிகமானோர் பட்டா கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இதன் பின்னராவது பிரச்சனையின் தீவிரத்தை கருதி அரசு உடனடி நடவடிக்கையில் இறங்காமல் உள்ளது.
எப்போதும் உழைக்கும் மக்களின் நலனை முன்னிறுத்தியே போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்துக்கு செவி சாய்த்து, போராட்டத்தின் நியாயம் கருதி அரசு பட்டா கொடுத்துவிட்டால், சாதி கட்டமைப்பு தகர்ந்து போய்விடும். ஏழைகள் சமூகத்தில் முன்னேற கூடாது என்ற வஞ்சக எண்ணத்தோடு செய்தி வெளியிடுகிறது `தினமணி’.
நடுநிலை என்று கூறிக்கொண்டு இப்படி நரி சிந்தனையோடு தினமணி செய்தி வெளியிடுவதில் இருந்து, பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது தெரிகிறது. வர்க்கப் பாசம் புரிகிறது. தினமணி திணிப்புமணியாக மாறிவிட்டது.

Tuesday, August 14, 2007

தண்ணீருக்கும் வஞ்சான் பாரு ஆப்பு!

தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த மகராசி, நல்லா இருப்பா! என்று கிராமப்புறங்களில் கூறக் கேட்டிருப்போம். ஆனால் தற்போது தவிக்கின்ற வாயிக்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலையை உருவாக்கும் போல் இருக்கிறது.


மக்களுக்கு வேண்டிய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை அறியாதவர் யாருமில்லை. அப்படியிருக்க ஒரு குடிநீர் திட்டத்தை உருவாக்கிவிட்டு, அதன் பயனை மக்கள் அனுபவிக்க விடாமல் தனியாரிடம் கொடுக்கும் நிலையை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.


தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழகத்தில் சிறியது, பெரியதுமாக 74546 குடிநீர் திட்டங்களை அமைத்து உள்ளது. இவற்றின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த வாரியம் 1995ம் ஆண்டு திட்டத்தால் பயனடையும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கூறியது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பு பணிகளை செய்யமுடியாமல் திண்டாடின. இதனால் மீண்டும் பராமரிப்பு பணிகளை வாரியமே ஏற்றுக் கொண்டது.உலகமயம், தராளமயம், தனியார்மயக் கொள்கைகள் நாட்டில் சமூக அமைதியை குலைத்து வருகின்றன. இதன் தாக்கம் படிப்படியாக அனைத்து துறைகளையும் ஆட்கொண்டு விட்டது. இப்போது குடிநீர் வாரியமும் அந்தப்பட்டியலில் சேர்ந்து விட்டது.


முதற்கட்டமாக டெண்டர் மூலம் 150 திட்டங்கள் தனியார் பராமரிப்புக்கு விடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 500 திட்டங்களை கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்விளைவு என்னவாக இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலதான்.உதாரணமாக டெண்டரில் ஒரு திட்டத்தை பராமரிக்க 20 பேர் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் பம்பிங் செய்ய வேண்டும் என்று இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். ஒப்பந்தக்காரர்கள் என்ன 5 பேரை நியமித்து 16மணி நேரம் மட்டுமே பம்பிங் செய்கின்றனர். இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீர் சரிவர கிடைக்காமல் போகும்.


கோவை மாவட்டத்தில் நேரடியாக ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தன. ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி 440பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 160பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மீதம் உள்ள 280 தொழிலாளர்களுக்கான சம்பளம் பணம் முறைகேடாக ஒப்பந்தகாரர்கள் பெற்றுக் கொள்கின்றனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது குழந்தைக்கும் தெரியும்.


இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் போகும். தண்ணீர் தட்டுப்பாடு உருவாகும். இந்த டெண்டர் எடுத்தவர்களின் பெரும்பாலனோர் ஆளும்கட்சி பிரமுகர்கள் என்பதிலிருந்தே திட்டம் எதற்காக என்பதும் வெட்டவெளிச்சமாகிறது.இருக்கும்போதே கொடுக்க மனும் வராத நமது சமூகத்தில், தண்ணீர் தட்டுப்பாட்டில் உள்ளவர்கள் தவித்த வாயிக்கு தண்ணீர் கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

Sunday, July 15, 2007

நாம் காணத் தவறிய சமூகங்கள்

தோழர் ஜீவா நூற்றாண்டு நிகழ்ச்சிகளையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தாம்பரம் பகுதி சார்பில் ஜூலை 3 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தமுஎச பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் பேசியதிலிருந்து:


நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, உள்நாட்டு மீனவர்கள் என ஒவ்வொரு பகுதி மீனவர்களின் கலாச்சாரம் வெவ் வேறாக உள்ளது. நெய்தல் நிலத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை மைகளை சமவெளிப்பகுதியில் உள்ள மக்களால் புரிந்து கொள்ள முடியாததாக உள்ளது.கடலில் மீன்பிடிக்க படகில் செல்லும் மீனவன், மோட்டார் சத்தத்தில் சத்தமாகவே பேசி பழக்கப்பட்டவன். மற்றவர்களிடத்திலும் அப்படியேதான் பேசுவான். ஆனால், சமவெளியில் உள்ளவர்கள் அவர்களை முரடர்கள் என்கிறார்கள்.


சென்னை நகரில் தங்க வீடில்லாமல் சாலையோரத்தில் வசிக்கும் மக்க ளின் வாழ்க்கை நிலைமை எவ்வளவு கொடூரமானது. இவர்களின சமூக உணர்வு எந்த மட்டத்தில் இருக்கும். குடிசைப் பகுதிகளில் கழிப்பிடம் கூட கிடையாது. பொதுக் கழிப்பிடத்தில் பார்த்தால் உள்ளே ஒருத்தர் இருப்பார். வெளியில் கொஞ்சம்பேர் வரிசையில் நிற்பார்கள். உள்ளே உள்ளவரின் மனநிலையும், வெளியே நிற்பவரின் மனநிலையும் எப்படிபட்டதாக இருக் கும்? அவர்களுக்கு சமூகத்தின் மீது என்ன சிந்தனை உருவாகும்?

தமிழகத்தின் மையப் பகுதியான மதுரையில் சவுராஷ்டிரா மக்கள் உள்ளனர். அவர்களின் பேச்சுவடிவம் வேறு. தமிழக எல்லையில் உள்ள மாவட்டங்களில் கேரளம், கர்நாடகம், ஆந்திரா பகுதி பண்பாடு கலந்துள் ளது. குமரியில் தமிழில், தென் கேரளத்தின் பண்பாடும் கோவையில் வட கேரளத்தின் பண்பாடும் கலந்துள்ளது. இப்படி பண்பாட்டுக் கலப்பு உள்ளது. சாம்போஜிராவ் கண்டுபிடித்த குழம்பு சாம்பார். அது ஊருக்கு ஊர் வேறுபடுகிறது.இப்படி பன்முகக் கலப்பு தமிழகத்தில் உள்ளது. அது திருமணம் உள் ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் வெளிப்படுகிறது. இப்படி உள்ள வற்றையெல்லாம் இணைக்கும் பாலமாக மொழி உள்ளது.


மொழியிலும் உச்சரிப்புகள் வேறுபடுகின்றன. நெல்லை சைவப் பிள்ளை மார்கள் பேசுவதை நெல்லைத்தமிழ் என்று சிலர் சொல்லிக் கொண்டி ருக்கிறார்கள். அது தவறு. வா-வாங்க இரண்டுக்கும் நடுவில் வாரும் என்ற வார்த்தையை பயன்படுத்து கின்றனர். இதுவே நெல்லைத்தமிழ். அங்கேயும் தலித் மக்களின் மொழிநடை வேறாக உள்ளது. இப்படி பல முரண்பாடுகள் சமூகத்தில் உள்ளது.


பாபர் மசூதி இடிப்பையொட்டி ஒவ்வொரு ஆண் டும் டிசம்பர் மாதத்தில் முஸ்லிலீம் சமுதாய மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறார் கள். சச்சார் கமிட்டியின் அறிக்கையில் கூறியுள்ளபடி மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் வேலைவாய்ப்பு இல்லை.ஆனால் அவர்களின் மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது சிறையில் உள்ளவர்களின் எண் ணிக்கை அதிகமாக உள்ளது. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு வருகிறார்கள். மீண்டும் சிறைக்கு கொண்டு செல்கிறார்கள். இப்படியாக பல ஆண்டுகளாகப் பல இளைஞர்கள் சிறையிலேயே உள்ளனர்.


தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான நாடோடி கள், நரிக்குறவர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை பயணத்திலேயே முடிந்து விடுகிறது. நம் வீட்டிற்குள் முன்பின் தெரியாதவர் வந்தால் கேள்வி கேட்கிறோம்.இந்த மக்களை பற்றி ஒருபோதும் யாரும் கேள்வி எழுப்பியது கிடையாது.பெண்களுக்கு வீட்டில் உள்ள சேரியாக அடுப்படி கள் உள்ளன. பெண்கள் சமூகம் பற்றி ஆண்களுக் குத் தெரிய வில்லை. தற்போது பெண்கள் பிரச்சனைகளைப் பற்றி எழுதும் பெண் எழுத்தாளர்களில் கூட பலர் ஆண்களின் சிந்தனையோடுதான் எழுகின் றனர்.


தலித் மக்களின் வாழ்க்கை நிலைமையை சமூகம் கண்டு கொள்ள மறுக் கிறது. அருந்ததியர் மக்கள் காலை 5மணிக்கு வேலைக்கு சென்று பீ அள்ளு கின்றனர். மாலை 3மணி வரை அள்ளிவிட்டு வீட்டிற்கு வருகின்றனர். அவர்கள் தங்களின் பிள்ளைகளைக் கூட கவனிக்க முடியவில்லை. பெரும்பாலும் அவர்கள் வீட்டில் அடுப்பு பற்ற வைப்பதே கிடையாது. புருஷனும், பொண்டாட்டியும் சென்று தண்ணியடித்துவிட்டு, கடையில் பரோட்டோவோ அல்லது வேறெதுவோ கார மாக சாப்பிட்டுவிட்டு படுக்கின்றனர். அவர்களை கேட்டால், தண்ணீர் கொதிக் கும் போதும், சாப்பிடும்போதும் பீ ஞாபகம்தான் வருகிறது. எனவே தண்ணீயடிக் கிறோம் என்கிறார்கள். இந்த மக்களிடம் பற்றி தண்ணியடிப்பது குற்றம் என்று நாகரீகம் பேச நமக்கு என்ன யோக்கிதை இருக்கிறது.
நாம் வாழும் சமூகத்தை சரியானதான் மாற்ற நாம் தவறி விட்டோம். எழுத் துக்களின் வந்ததைவிட இந்த மக்களின் வாழ்க்கை கொடூரமானதாக உள்ளது.
குழந்தைகளுடன் பேசக்கூட பலருக்கு தெரியவில்லை. எனது வீட்டருகே ஒரு ஆரம்ப பள்ளி உள்ளது. அங்கே எப் போதும் ஒரே சத்தம். அமைதி, சத்தம் போடாதே, முட்டிப்போடு, என மிரட்டல் சத்தம்தான் கேட்கும். அந்த குழந்தை களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியரும் கட்டையாக மீசை வைத்திருக் கிறார். பார்க்கும்போதே பயமாக இருக்கும். குழந்தைகள் எப்படி சுதந்திரமாக படிக்கும், சிந்திக்கும்?


ஜீவா தனது காலத்தில் ஏற்பட்ட சகலவிதமான மாற்றங் களுக்கும் தன்னை உட்படுத்திக் கொண்டார். ஜீவாவின் பழைய படங்களை பார்த்தால் அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு இருப்பார். ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் கம்யூனிச இயக்கம் பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் இருந்தது. பஞ்சாலைத் தொழிலாளர்களின் உடையை அவரும் அணிந்து தொழிலாளர்களுடன் தொழிலாளியாக இருந்தார். ஜீவாவின் பாதையில் மக்களோடு மக்களாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம்.

Wednesday, July 11, 2007

ஆட்டோ யோசித்தது உண்டா?

`காசு கொடுத்தா வேலை நடக்குது'


பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் கொள்ளையடிக்கிறார்களா? அரசு இவர்களிடம் தேவைகளை பூர்த்தி செய்கிறதா? நடைமுறை சிக்கல் என்ன? வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) என்று சொல்லக்கூடிய இடங்களில் பணம் கொடுத்தால்தான் வேலை நடக்குமா? இதனை தடுக்க ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுவதென்ன? இப்படிப்பல சந்தேகங்களுடன் ஆட்டோ ஓட்டுநர்களை சந்தித்தபோது:

கடந்த பல ஆண்டுகளாக மாநில அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்தவில்லை. கட்டுபடியான கட்டணத்தை வைத்து எப்படி எங்களால் எங்கள் குடும்பம் நடத்த முடியும். குழந்தைகளை படிக்க வைக்க முடியும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும். எங்களின் வாழ்க்கை தேவைக்கான பணத்தை ஆட்டோ ஓட்டிதான் சம்பாதிக்கிறோம். குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் கொஞ்சம் அக்கம்பக்கம் கடன் வாங்குகிறோம். கடன் கிடைக்காவிட்டால் பயணிகளிடம் கொஞ்சம் அதிகமாக கேட்கிறோம். எங்கும் சென்று திருடவில்லை.

அதேசமயம் எங்கோ ஒன்றிரண்டு இடங்களில் சில நபர்கள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதை வைத்து ஆட்டோக்காரர்களே மோசம் என்பதுபோல் சித்தரிக்கப்படுகிறோம். சம்பாதிக்கும் பணம் வாயிக்கும், வயிற்றுக்கும் பத்தாமல் போகவேதான் அடித்துபிடித்து ஆட்டோ ஓட்டுகிறோம். ஆனால் ஆர்டிஓ அலுவலகம் போனால் லட்சம் கேட்கிறார்கள். காவல்துறையினர் லஞ்சம் கேட்கிறார்கள். டிராபிக் போலிஸ் லஞ்சம் கேட்கிறார்கள். இப்படி லஞ்சம் லஞ்சம் என்று அலைபவர்களை கண்டால் மக்கள் பயந்து நடுங்குகிறார்கள். அப்பாவிகளாக, வாழ வழியில்லாமல் வாடகையாகவோ, சொந்தமாகவோ வாங்கிக் கொண்டு ஆட்டோ எடுத்து வந்தால் எங்களை ஏளனமாக பார்க்கிறார்கள்.

வாடகை ஆட்டோ என்றால், காலை 6மணிக்கு எடுத்து மாலை 6மணி வரை ஓட்டினால் 200 ரூபாயோ அல்லது 400 ரூபாயோ கிடைக்கும். வாடகை ஆட்டோ கட்டணமாக 150 ரூபாய் கொடுக்க வேண்டும். அத்துடன் 2லிட்டர் பெட்ரோலுடன் ஆட்டோவை ஒப்படைக்க வேண்டும். இப்படியே 250 ரூபாய் செலவாகிறது. காலையில் இருந்து ஆட்டோ ஓட்டுகையில் எங்ளுடைய டீ செலவு, பஞ்சர் போடுவது, சாப்பிடுவது என 50 ரூபாய் வரை செலவாகி விடும். இதெல்லாம் போக கையில் நிற்பது வெறும் 100 ரூபாய். இதை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும். சொந்த ஆட்டோவாக இருந்தால் சேட்டுவிடம் வாங்கிய கடன், அல்லது கந்து வட்டி என 200 ரூபாய் போய்விடும். பெட்ரோலுக்கு 100 ரூபாய்குக் மேல் செலவாகும்.
சிலர் மீட்டர் போடாமல் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். டிஜிட்டல் மீட்டர் என எந்த மீட்டர் பொருத்தினாலும் 3ஆயிரம் முதல் 5ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இது எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. எனவே குத்துமதிப்பாக தொகை கேட்கிறோம். இத்தகைய சூழலில் எங்களின் வாழ்க்கை நரகமாக போய்விட்டது. சில நேரங்களில் மன உளைச்சலில் உள்ள நாங்கள் சில நேரங்களில் பயணிகளிடம் தவறுதலாக வார்த்தைகளை உபயோகிக்கிறோம்.

தமிழக அரசு கடந்த 10ஆண்டுகளாக கட்டணத்தை உயர்த்தாமல் இருந்து விட்டது. இப்போது முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு 14 ரூபாய், அடுத்து வரும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 6 ரூபாய் என உயர்த்தி உள்ளது. இது கட்டுபடியாகது. இந்த மீட்டர் கட்டணத்தை மீட்டர் கட்டணத்தை முதல் 1.5கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.15 என்றும், அடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் ரூ.7 என்றும் மாற்ற வேண்டும்.
டிஜிட்டல் மீட்டர் பொருத்த வேண்டும் என்ற அரசு ஆணை பிறப்பித்துள்ளது அதனை விளக்கி கொண்டு, கட்டணம் சரியாக, நியாயமாக இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து விருப்பப்பட்ட மீட்டரை பொருத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

ஆர்டிஓ அலுவலகங்களில் அனைத்து தகவல்களும், விண்ணப்பங்களும் ஆங்கில மொழியில் உள்ளது. ஆங்கில மொழி தெரியாக ஆட்டோ ஓட்டுநர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். ஆர்டிஓ அலுவலகத்தில் வழங்கப்படும் படிவங்கள், தகவல் பறிமாற்றங்கள் அனைத்தும் தமிழ்மொழியில் மாற்றினால் உபயோகமாக இருக்கும்.
வாகனப் பதிவு, தகுதிச் சான்று, அனுமதி சான்று பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட எந்த பணியாக இருந்தாலும் நாங்கள் நேரடியாக சென்றால் காலம்தாழ்த்துவதோடு, மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் அதிகாரிகள் நடந்து கொள்வதோடு, தரக்குறைவாக பேசுகின்றனர். ஆனால் அதே வேலைக்கு புரோக்கரை அழைத்து சென்றால் உடனடியாக வேலைகளை முடித்து தருகின்றனர். காசு கொடுத்தால் ஆர்டிஓ அலுவலகத்தில் உள்ளவர்கள் நைசாக வேலை முடித்துக் கொடுக்கின்றனர்.
இப்போது சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு ஆட்டோக்களில் கேஸ்கிட் பொருத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். கேஸ்கிட் பொருத்த 20ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். சுற்றுச்சூழல் மீது எங்களுக்கும் அக்கரை உள்ளது. அதேநேரத்தில் நாங்கள் பணக்கஷ்டத்தில் உள்ளோம் எனவே அரசு சில ஆயிரம் ரூபாய்களை மானியமாக வழங்க வேண்டும். மீதம் உள்ள தொகையை வங்கிகள் கடன் வழங்க முன்வர வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கத்தான் ஆட்டோக்களில் கேஸ்கிட் பொருத்த சொல்கிறார்கள். ஒருசிலர் பொருத்தியுள்ளனர். அவர்களின் ஆட்டோக்களுக்கும் 200 ரூபாய் பசுமை வரி வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?

Thursday, June 28, 2007

THANIYARMAYAM THEERVAA?

தனியார்மயம் தீர்வா?
பல்லாவரம் நகராட்சி அனுபவம் என்ன?
பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜிஎஸ்டி சாலையில் இருக்கும் மின்விளக்குகள், சாக்கடை கால்வாய் தனியாரின் பராமரிப்பில் உள்ளது. அந்நிறுவனம் மின் விளக்குகளை சரியாக பராமரிப்பதும் இல்லை. கால்வாயை சுத்தம் செய்வதும் இல்லை. இதனால் குரோம்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வரும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே, பராமரிப்பு பணிகள் தனியார் மயமாக்கியதால் எந்தவிதமான பயனும் நகராட்சிக்கு ஏற்படவில்லை. மாறாக கூடுதல் செலவுதான் ஏற்பட்டுள்ளது.அதேபோன்று பாதாள சாக்கடை அமைக்கும் பணியையும் நகராட்சி தனியாருக்கு விட்டுள்ளது. குழாய் புதைக்க சாலைகளை தோண்டி எடுக்கப்படும் மண்ணில் பாதியை ஒப்பந்தக்காரர்கள் விற்றுவிட்டு, குறைந்த அளவு மண்ணைப் போட்டு பள்ளத்தை மூடுகின்றனர். இதனால் சாலைகள் முழுவதும் மேடு பள்ளங்களாக உள்ளன.இதற்கெல்லாம் காரணம் என்ன? நகராட்சியில் மொத்தம் 450 ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால் 210பேர் மட்டுமே உள்ளனர். எனவே காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டியது நகராட்சியின் கடமை. ஆனால் நகராட்சி என்ன செய்கிறது? பணிகளை தனியாருக்கு விடுகிறது.என்றுதான் திருந்தப்போகிறார்களோ இவர்கள்.

WATER

ரெண்டு நாளைக்கு ஒரு முறையாவது
குடிநீர் கிடைக்குமா?
பல்லாவரம் மக்களின் ஏக்கம்

பல்லாவரம் நகராட்சியில் உள்ள மக்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு நாளைக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வேண்டுமென்று அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்லாவரம் நகராட்சியில் உள்ள சுமார் 1.75லட்சம் மக்க ளுக்கு நாள்தோறும் 110 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. நகராட்சிக்கு பாலாற்றில் இருந்து 40-50லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்து வந்தது. கோடைக் காலம் துவங்கியதிலிருந்து நீரின் அளவு குறைந்து விட்டது. இதனால் இங்குள்ள வர்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன்காரணமாக போதிய குடிநீர் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.இது தொடர்பாக 40வது வார்டு கவுன்சிலர் எஸ்.நரசிம்மனிடம் கேட்டபோது, நகராட்சி சார்பில் பாலாற்றில் கூடுதலாக கிணறுகளை அமைக்க வேண்டும். தற்போதுள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க பயன்படுத்தும் மோட்டாருக்கு தேவையான மின்சாரம் கிடைக்கவில்லை. எனவே, அங்கு ஜெனரேட்டர்களை பொருத்த வேண்டும். எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றார்.