Pages

Tuesday, October 4, 2011

5 மாதங்களில் 8 'காவல்நிலையகொலைகள்'


அரசே தனது குடிமக்களைக் கொல்லக்கூடாது என்ற இயக்கம் உலகளவில் வலுப்பெற்று வருகிறது. ஆனால், தமிழகத்தில் இதற்கு முற்றிலும் மாறாக அரசு வன்முறை தலை விரித்தாடுகிறது.

காவல் துறையை சீர்திருத்துவதற்கு பதிலாக கொம்பு சீவி விடுகிற காரி யத்தை சட்டமன்றத்திலேயே முதல்வர் அரங்கேற்றினார். அதன் தொடர்விளைவாக காவல்துறை கடிவாளம் இல்லாத குதிரையாக ஆட்டம் போடத் தொடங்கியுள்ளது.

இதன் விளைவாக, அதிமுக அரசு பொறுப்பேற்ற 5 மாதங்களில் 8 காவல் நிலைய கொலைகள் நிகழ்ந்துள்ளன. இது மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் கடைசி ஒன்றரை ஆண்டுகளில் 8 காவல் நிலைய கொலைகள் நடந்தன. ஆனால், அதிமுக ஆட்சியில் 5 மாதத்தில் காவல் நிலையங்களில் 8 பேரை கொன்று சாதனை படைத்து விட்டார்கள்.

அதிமுக அரசு பொறுப்பேற்றது முதல் காவல் துறையினர் தொடர்ந்து அத்து மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற புகார் பரவலாக உள்ளது. அதிமுக ஆட்சி பொறுப்பில் இருக்கும்போதுதான் குற்றங்கள் குறைவாக உள்ளது என்று ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுகின்றன. ஆனால் உண்மை அதற்கு மாறாக உள்ளன.

காவல்துறையினர் சுயமாக செயல்பட, அவர்களின் பணிகளில் யாரும் குறுக்கிட மாட்டோம். சுதந்திரமாக செயல்படலாம். கட்சிக்காரர்கள் யாரும் காவலர்களின் பணியில் குறுக்கிடக் கூடாது என்று முதலமைச்சர் கூறியது சரிதான்.

அதேநேரத்தில் காவல்துறை மனித உரிமைகளை பேணுவதிலும், மனித மதிப்பை பாதுகாப்பதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்த முதல்வர் தவறிவிட்டாரோ?

காவல் துறை எதைப்பற்றியும் கவலைப்படாமல் மனிதத்தை காலில் போட்டு மிதித்துக் கொண்டு இருப்பதை ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றன.

சட்டத்தின் ஆட்சி என்று கூறிக்கொண்டு போலீசார் ஆங்காங்கே தடியடி நடத்தி வருகின்றனர். இதன் உச்சக்கட்டமாக பரமக்குடியில் அநியாய மாக 6 பேரை சுட்டுக் கொன்றனர். சேலத்தில் மூடப்பட்ட பலநோக்கு சிறப்பு மருத்துவமனையை திறக்கக் கோரியதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது காவலர்கள் தடியடி நடத்தினர்.

ஆங்காங்கே காவல் துறையினர் வரம்பு மீறி அடிப்பது, நடுரோட்டில் நிறுத்தி வைத்து அடிப்பது போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதுபோன்று கடந்த 5 மாதங்களில் இப்படி ஏராளமான உதாரணங்களை காட்ட முடியும்.

தற்போது, மனித உரிமையாளர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் கடந்த 5 மாதங்களில் 8 காவல் நிலையச் சாவுகள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தைப் போன்றே இந்தியா முழுவதும் நடைபெற்ற காவல் நிலையச் சாவுகள், என் கவுன்டர்கள் ஆகியவற்றை கண்டு அதிர்ச்சி அடைந்த, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, காவல் நிலைய சாவுகள், எண் கவுன்டர்கள் ஆகியவற்றில் தொடர்புடைய காவலர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்று கருத்து தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் நடைபெறுவதை காவல் நிலையச் சாவு என்று கூறு வதை விட, காவல்நிலைய கொலை என்றும், என்கவுன்டர் இறப்பை மோதல் சாவு என்று கூறாமல் போலி மோதல் கொலை என்றே சொல்ல வேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன.

இது வெறும் வார்த்தைப் பிரச்சனை அல்ல. இப்படித்தான் பிரச்சனைகளை அணுக வேண்டும் என்பதற்கான வழிமுறையாகும்.

Sunday, October 2, 2011

ஆட்டோ மீட்டர்???




நம்மில் பலர் சம்பள உயர்வு வேண்டுமென்று கேட்போம். அதற்காக போராடுவோம். அதனை பெற அனைத்து தகிடுதத்தங்களையும் செய்வோம். அதுவே ஒரு தொழிலாளி கூலி உயர்வு கோரினால் நமக்கு பொத்துக் கொண்டு கோவம் வரும். அதுப்போலத்தான் ஆட்டோ ஓட்டுநர்களின் விவகாரமும்.

சென்னை நகரில் இயங்கக் கூடிய ஆட்டோக்களில் மீட்டர் போட்டு ஓட்டுகிறோம். மீட்டர் போட்டு ஓட்டுவதற்கு ஏற்ப நியாயமான கட்டணத்தை அரசு நிர்ணயிக்குமா? என்று ஒரு ஆட்டோ ஓட்டுநர் கேட்டால் என்ன பதில் சொல்ல ! !

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 70ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன (இவற்றில் வெறும் 7ஆயிரம் ஆட்டோக்களே சிஐடியு சங்கத்தில் உள்ளது). இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி, ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் பொறுப்பு மாநில அரசிடமே உள்ளது.  ஆனால், மாநில அரசு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏற்புடைய கட்டணத்தை நிர்ண யிக்க மறுக்கிறது.

ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியான போராட்டத்தால், பேரா. மகாலிங்கம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி  அளித்த பரிந்துரைகளை கடந்த திமுக அரசு அமல்படுத்தவில்லை.

2007ம் ஆண்டு குறைந்தபட்ச கட்ட ணம் (2கிமீ) 14 ரூபாயும், அடுத் தடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 6 ரூபாய் என நிர்ணயித்தது. இதனை ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

2007ம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 45 ரூபாய்க்கும், எரிவாயு ஒரு கிலோ லிட்டர் 27 ரூபாய்க்கும் விற்றது. தற்போது, இது 71 ரூபாய், 43 ரூபாய் என உயர்ந்துள்ளது. இந்த விலையா னது மாத மாதம் உயர்ந்து கொண்டே செல்கிறது.

மாநகரத்தின் வாகனப் பெருக் கம், போக்குவரத்து நெரிசல், சிக்னல் பெருக்கம் ஆகியவற் றின் காரணமாக ஆட்டோக் களை இயக்குவது சிரமமாக உள்ளது. வாகனத்தை மெது வாக இயக்குவதால் எரிபொருள் அதிகம் செலவாகிறது. நான்கு சவாரி செய்வதற்கு பதிலாக 2 சவாரிதான் செய்ய முடிகிறது. வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு உள்ளது போல் ஆட்டோ ஓட்டு நர்களுக்கு எந்த சட்டச் சலுகையும்  இல்லை. விலைவாசி உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு அதிமுக அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். குறைந்தபட்ச கட்டணமாக 30 ரூபாயும், அடுத்தடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 15 ரூபாயும் நிர்ணயிக்க வேண்டுமென்று ஓட்டுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்புப்படி, சென்னை நகரில் கே ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 7 கே நிரப்பும் மையங்கள் மட்டுமே உள்ளன. இதனால் ஆட்டோக்களில் கே கிட் பொருத்தப்பட்டு இருந்தாலும், பெட்ரோல் மூலமே இயக்குகின்றனர் என்ற நடைமுறை சிக்கலை அரசு புரிந்து கொண்டு கட்டணத்தை மாற்ற வேண்டும், என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்ளேனத்தின் பொதுச் செயலாளர் எம்.எ.ராஜேந்திரன் கூறுகிறார்.

தமிழக அரசு சென்னை நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, ஓட்டுநர்களும், பொதுமக்களும் ஒப்புக் கொள்ளும் வகையில் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைத் தால், மீட்டர் கட்டணத்தை வசூலிக்க தயாராக இருக்கிறோம் என்றும் எம்.எ.ராஜேந்திரன் கூறினார்.

அரசு என்ன செய்யப் போகிறது ? நாம் என்ன செய்யப்போகிறோம் ?