தனியார்மயம் தீர்வா?
பல்லாவரம் நகராட்சி அனுபவம் என்ன?
பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜிஎஸ்டி சாலையில் இருக்கும் மின்விளக்குகள், சாக்கடை கால்வாய் தனியாரின் பராமரிப்பில் உள்ளது. அந்நிறுவனம் மின் விளக்குகளை சரியாக பராமரிப்பதும் இல்லை. கால்வாயை சுத்தம் செய்வதும் இல்லை. இதனால் குரோம்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வரும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே, பராமரிப்பு பணிகள் தனியார் மயமாக்கியதால் எந்தவிதமான பயனும் நகராட்சிக்கு ஏற்படவில்லை. மாறாக கூடுதல் செலவுதான் ஏற்பட்டுள்ளது.அதேபோன்று பாதாள சாக்கடை அமைக்கும் பணியையும் நகராட்சி தனியாருக்கு விட்டுள்ளது. குழாய் புதைக்க சாலைகளை தோண்டி எடுக்கப்படும் மண்ணில் பாதியை ஒப்பந்தக்காரர்கள் விற்றுவிட்டு, குறைந்த அளவு மண்ணைப் போட்டு பள்ளத்தை மூடுகின்றனர். இதனால் சாலைகள் முழுவதும் மேடு பள்ளங்களாக உள்ளன.இதற்கெல்லாம் காரணம் என்ன? நகராட்சியில் மொத்தம் 450 ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால் 210பேர் மட்டுமே உள்ளனர். எனவே காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டியது நகராட்சியின் கடமை. ஆனால் நகராட்சி என்ன செய்கிறது? பணிகளை தனியாருக்கு விடுகிறது.என்றுதான் திருந்தப்போகிறார்களோ இவர்கள்.
Thursday, June 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment