Pages

Thursday, August 16, 2007

`தின(திணிப்பு)மணி’ யின் வர்க்க பாசம்

`பதவி உயர்வு வழங்குவது போல் தண்டனை கொடுப்பது’ படிப்பதே வேடிக்கையாக இருக்கிறதல்லவா?
அப்படிதான் தின (திணிப்பு)மணியின் செய்திகளும் உள்ளன.
இந்துத்துவா வாதிகளின் கையில் சிக்குண்டு திணிப்புமணியாகி போன தினமணி, மத்திய அரசை எதிர்த்து, மாநில அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட்டுகள் போராட்டம் நடத்தினால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பெரிதாக போடுவதை நடுநிலை என்று வைத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் இவர்களின் போராட்டம் இரட்டை வேடம் என்று கட்டுரை எழுதுவதை என்னவென்று எடுத்துக் கொள்ளவது.
மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் பல்லாயிரக்கணக்கான அருந்ததிய மக்கள் ஒன்று திரண்டு சென்னையில் பேரணி நடத்தினார்கள். தமிழகத்தில் முதன்முறையாக சாதி இயக்கங்களே கண்டுகொள்ளாத அருந்ததி மக்களை ஒன்று திரட்டி, மாநாடுகள் நடத்தி, வர்க்கப் போர்முனைக்கு அழைத்து வந்து, உரிமைக்காக போராடினால், இதன்மீதான நியாயத்தை புரிந்து கொள்ளாமல், மனு சிந்தனையோடு தினமணி ஒருகாலம் படம் போட்டுவிட்டு செய்தியே போடவில்லை.
தினப்புளுகு ஏடும் இதே பணியையே பின்பற்றியது. ஆனால், விஞ்ஞானத்திற்கு புறம்பாக ராமர் பாலம் உள்ளதாகவும், அதனை இடிக்க கூடாது என்றும் மதவெறியர்கள் சென்னையில் உண்ணாவிரதமிருந்தால் அதனை பெரிதாக போடுகிறார்கள்.
என்னே! இவர்களின் சமூக முற்போக்கும், நடுநிலைமையும் நினைத்தால் வெட்கமடைய செய்கிறது.முதலாளித்துவ ஏடுகள் சமூக பிரச்சனைகளில் சிலவற்றில் சில நேரங்களில் நியாயமாக நடந்து கொண்டாலும், வர்க்கப் போராட்டங்களுக்கு எப்போதும் எதிராகவே உள்ளன.

பூனைக்குட்டி வெளியே வந்தது

“குந்த குடிசையில்ல நாய் பேசற பேச்சை பாரு” என்று பரவலாக நகர்ப்புறங்களில் பேசக் கேட்டிருப்போம்.
நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத குடும்பங்கள் லட்சக்கணக்கில் உள்ளன. இவர்கள் அனைவரும் பிழைப்பு தேடி வந்தவர்களே. உயிரை பணையமாக வைத்து, ரத்தத்தை சிந்தி உழைத்து, வாய்வயிற்றைக் கட்டி சிறுகசிறுக சேர்த்து வைத்தப் பணத்தில் ரியல் எஸ்டேட் முதலைகளிடம் கொட்டி இடம் வாங்குகிறார்கள். அந்த இடம் கண்டிப்பாக பட்டா நிலமாக இருக்க வாய்ப்பில்லை.
குந்த சொந்தமாக ஒரு குடிசையாவது வேண்டுமென்ற உந்துதலில், ஆளும் கட்சிகாரர்கள் மடக்கி வைத்துள்ள நிலத்தை வாங்கிக் கொள்கிறார்கள். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் புறம்போக்கு நிலத்திற்கு ஏகப்பட்ட விலையை சொல்லி ரியல்எஸ்டேட் முதலைகள் கொள்ளையடிக்கிறார்கள். அதிகாரிகளும் தங்களுக்கு சேரவேண்டிய பங்கு வந்து சேர்ந்தவுடன் ஏழை மக்கள் மீது கரிசனம் உள்ளவர்கள்போல், தெரு, மின்விளக்கு, குடிநீர் என அடிப்படை வசதிகளை ஓரளவிற்கு செய்து கொடுக்கிறார்கள். ஆனால் பட்டா மட்டும் தர மறுக்கிறார்கள்.
இதற்கு அதிகாரிகள் கூறுவதை கேட்டால் வாயல் சிரிக்க முடியாது. “ சார், அந்த இடம் நீர்வழிப்புறம்போக்கு சார். இந்த இடம் வாய்க்கால் புறம்போக்கு சார், அந்த இடம் சொல்றீங்க பாருங்க அதுவந்து ஏரி புறம்போக்கு சார், அது கோயில் நிலம், அதுல எப்படி சார் பட்டா கொடுக்க முடியும். நீங்களே சொல்லுங்க? ஆக்கிரமிச்சு வைச்சியிருக்கானுங்க,” என்பார்கள். இதுதான் அதிகாரத்தில் உள்ள எடிபிடிகளின் குரலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
`தனக்கு கீழே ஒருவன் எப்போதும் இருக்க வேண்டும். அவன் எனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற சாரம்சத்தில்தான் தமிழக சாதி கட்டமைப்பு உள்ளது. இந்த ஆதிக்க சாதி வெறிப்பிடித்த, சாதி வெறிகளுக்கு அடிநாதமாக உள்ள மனுதர்மத்தை கடைபிடிக்கும் இந்துதுவா வாதிகளின் கையில் தற்போது `தினமணி’ நாளேடு உள்ளது.
இந்த மதவாதிகளின் வஞ்சக குரலாக `தினமணி’யில் வியாழனன்று (ஆக.16) நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக நிலப் போராட்டம் உள்ளது என்ற தோனியில் செய்தி வந்துள்ளது. இது ஏதோ சாதாரணமான செய்தி அல்ல. மனுதர்மத்தின் வெளிப்பாடு. மனுதர்மத்தை கடைபிடிக்கும் பாப்பான், தான் கூறவந்ததை எப்போதுமே நேரடியாக கூறாமல், நடுநிலையாக கூறுவதுபோல், வஞ்சகம் செய்வான். அப்படிதான் இந்த செய்தியைப் பார்க்க வேண்டும். இத்தகைய கருத்துக்களுக்கு நடுத்தர வர்க்கத்தினர் எப்போதும் ஆட்பட்டுவிடுவார்கள். அவர்களுக்கு தொழிலாளி வர்க்கத்தின் வலியும் தெரியாது, முதலாளிகளின் சூழ்ச்சியும் புரியாது. கண்கெட்ட பிறகு சூரியனை கும்பிடும் அதிபுத்திசாலிகள் இவர்கள்.
குடிமனைப்பட்டா இல்லா மக்களை அணிதிரட்டி குடிமனைப்பட்டா வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் சென்னையில் மட்டும் 10 வட்டாட்சியர் அலுவலங்கள் முன்பு நடத்திய போராட்டங்களில் 25ஆயிரத்திற்கும் அதிகமானோர் பட்டா கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இதன் பின்னராவது பிரச்சனையின் தீவிரத்தை கருதி அரசு உடனடி நடவடிக்கையில் இறங்காமல் உள்ளது.
எப்போதும் உழைக்கும் மக்களின் நலனை முன்னிறுத்தியே போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்துக்கு செவி சாய்த்து, போராட்டத்தின் நியாயம் கருதி அரசு பட்டா கொடுத்துவிட்டால், சாதி கட்டமைப்பு தகர்ந்து போய்விடும். ஏழைகள் சமூகத்தில் முன்னேற கூடாது என்ற வஞ்சக எண்ணத்தோடு செய்தி வெளியிடுகிறது `தினமணி’.
நடுநிலை என்று கூறிக்கொண்டு இப்படி நரி சிந்தனையோடு தினமணி செய்தி வெளியிடுவதில் இருந்து, பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது தெரிகிறது. வர்க்கப் பாசம் புரிகிறது. தினமணி திணிப்புமணியாக மாறிவிட்டது.

Tuesday, August 14, 2007

தண்ணீருக்கும் வஞ்சான் பாரு ஆப்பு!

தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த மகராசி, நல்லா இருப்பா! என்று கிராமப்புறங்களில் கூறக் கேட்டிருப்போம். ஆனால் தற்போது தவிக்கின்ற வாயிக்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலையை உருவாக்கும் போல் இருக்கிறது.


மக்களுக்கு வேண்டிய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை அறியாதவர் யாருமில்லை. அப்படியிருக்க ஒரு குடிநீர் திட்டத்தை உருவாக்கிவிட்டு, அதன் பயனை மக்கள் அனுபவிக்க விடாமல் தனியாரிடம் கொடுக்கும் நிலையை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.


தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழகத்தில் சிறியது, பெரியதுமாக 74546 குடிநீர் திட்டங்களை அமைத்து உள்ளது. இவற்றின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த வாரியம் 1995ம் ஆண்டு திட்டத்தால் பயனடையும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கூறியது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பு பணிகளை செய்யமுடியாமல் திண்டாடின. இதனால் மீண்டும் பராமரிப்பு பணிகளை வாரியமே ஏற்றுக் கொண்டது.உலகமயம், தராளமயம், தனியார்மயக் கொள்கைகள் நாட்டில் சமூக அமைதியை குலைத்து வருகின்றன. இதன் தாக்கம் படிப்படியாக அனைத்து துறைகளையும் ஆட்கொண்டு விட்டது. இப்போது குடிநீர் வாரியமும் அந்தப்பட்டியலில் சேர்ந்து விட்டது.


முதற்கட்டமாக டெண்டர் மூலம் 150 திட்டங்கள் தனியார் பராமரிப்புக்கு விடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 500 திட்டங்களை கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்விளைவு என்னவாக இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலதான்.உதாரணமாக டெண்டரில் ஒரு திட்டத்தை பராமரிக்க 20 பேர் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் பம்பிங் செய்ய வேண்டும் என்று இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். ஒப்பந்தக்காரர்கள் என்ன 5 பேரை நியமித்து 16மணி நேரம் மட்டுமே பம்பிங் செய்கின்றனர். இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீர் சரிவர கிடைக்காமல் போகும்.


கோவை மாவட்டத்தில் நேரடியாக ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தன. ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி 440பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 160பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மீதம் உள்ள 280 தொழிலாளர்களுக்கான சம்பளம் பணம் முறைகேடாக ஒப்பந்தகாரர்கள் பெற்றுக் கொள்கின்றனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது குழந்தைக்கும் தெரியும்.


இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் போகும். தண்ணீர் தட்டுப்பாடு உருவாகும். இந்த டெண்டர் எடுத்தவர்களின் பெரும்பாலனோர் ஆளும்கட்சி பிரமுகர்கள் என்பதிலிருந்தே திட்டம் எதற்காக என்பதும் வெட்டவெளிச்சமாகிறது.இருக்கும்போதே கொடுக்க மனும் வராத நமது சமூகத்தில், தண்ணீர் தட்டுப்பாட்டில் உள்ளவர்கள் தவித்த வாயிக்கு தண்ணீர் கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?