Pages

Saturday, April 3, 2010

பேருந்து கட்டணம்-பெருங்கட்டணம்



சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தடுக்க அரசு திண்டாடி வருகிறது. பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பதன் மூலமே அதனை செய்ய முடியும். தமிழக மக்களின் தேவையை உணர்ந்து சில நூறு பேருந்துகளை வாங்கி உள்ளது. அந்த பேருந்துகளை ஏழை எளிய மக்கள் பயன்படுத்த முடியாதபடிஅதிக கட்டணத்தில் இயக்கப்படுகிறது.

சாதாரண பேருந்துகளில் (வெள்ளை போர்டு) 2ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரணப் பேருந்துகளை விட எல்எஸ்எஸ் பேருந்துகளில் 50பைசாவும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ஒன்றரை மடங்கும், டீலக்ஸ் பேருந்துகளில் எல்எஸ்எஸ் பேருந்துகளை விட இரண்டு மடங்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எம் சர்வீஸ் பேருந்துகளில் ஒரு விதமாகவும், ஏசி பேருந்துகளில் ஒரு விதமாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆட்டோக் கட்டணத்தை விட ஏசி பேருந்து கட்டணம் குறைவு என்றாலும் கூட, சாதாரண பேருந்துகளை கூட பயன்படுத்த முடியாதவர்கள் சென்னையிலும், அதனை சுற்றியுள்ளவர்களும் கணிசமாக உள்ளனர் என்பதை அரசு உணர வேண்டும்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள 3000க்கும் அதிகமான பேருந்துகளில் குறைந்தபட்சம் 2ஆயிரம் பேருந்துகளையாவது சாதாரணக் கட்டணத்தில் இயக்க வேண்டும். பொதுப் போக்குவரத்தை பலப்படுத்துவதின் மூலமே சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்.

சென்னையில் உள்ள பேருந்துகளில் 5ல் ஒரு பகுதி மட்டுமே சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுகிறது. இதனால் சாதாரண பேருந்துகளுக்காக சாலையோரங்களில் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனர். இதுவும் போக்குவரத்து நெரிசலக்கு ஒரு காரணமாக அமைகிறது. சாதாரண பேருந்துகளில் கூட்ட நெரிசல் இருப்பதால், படிகளில் தொங்கிச் செல்வதும், விபத்து ஏற்படுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.

பாலங்கள் கட்டுவதாலும், சாலைகள் விரிவாக்கம் செய்வதாலும் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணமுடியாது. பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் பேருந்துகளின் பெயர்களை மாற்றி கட்டணக் கொள்கை நிகழ்த்துவதையும் கைவிட வேண்டும்.

3 comments:

யாநிலாவின் தந்தை said...

உங்களது கருத்துக்கள் பலரை அடைய தமிளிஷ், தமிழ்மணம் போன்ற திரட்டிகளை பயன்படுத்துங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்....

Sindhan R said...

பாலோவர் லின்க் குடு தோழா

உங்களுடன் said...

yappadi da fllower link koduppathu