Pages

Thursday, May 22, 2008



நம்மிடம் உள்ள நியாயத்தையும் ஆவேசத்தையும்


மக்களின் உணர்வுகளாக மாற்ற வேண்டும்



சென்னை விமான நிலைய விரிவாக்கத்தை குடியிருப்பு பகுதிகளில் செய்ய அரசு முற்பட்டபோது, அதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக போராடி வெற்றி பெற்றது. அந்த போராட்டக் குழுவின் நிர்வாகிகளில் ஒருவராக பரமேஸ்வரி கருப்பையாபிள்ளை பணியாற்றினார்.



சிலமாதங்களுக்கு முன்னாள் அவரும் அவரது மகள்கள் பூர்ணிமா, பிரியா ஆகிய மூவரும் அகால மரணமடைந்தனர். இதனையடுத்து கருப்பையா பிள்ளை, தனது வீட்டை மார்க்சிஸ்ட் கட்சிக்கு அளித்தார்.



இந்த கட்டிடத்திற்கு திருமதி பரமேஸ்வரி நினைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் என்று பெயரிடப்பட்து. இந்த அலுவலகம், கல்வெட்டு திறப்பு விழா நிகழ்ச்சி அன்மையில் பொழிச்சலூரில் நடைபெற்றது.



இந்த உணர்ச்சிமிகு விழாவில் கருப்பையா பிள்ளை பேசுகையில், " எனது வீடு மக்களுக்கு பயன்படும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தை நிறைவேற்றி உள்ளீர்கள். ரொம்ப நெகிழ்ச்சியாக உள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சரியான வழிகாட்டியதோடு, எனது வீட்டில் நடந்த அசம்பாவிதத்தை எந்த பிரச்சனை இல்லாமல் கட்சி தோழர்கள் முடித்துக் கொடுத்தனர்" என்றார்.


"யார் நிர்ப்பந்தமும் இல்லாமல், எனது சுய முடிவின்படி இந்த வீட்டை கட்சிக்கு கொடுத்தேன். எல்லோருக்கும் பயன்படும் இடமாக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் இருக்கும். இதில் ஒரு பகுதியை மாணவர்கள் பயன்பெறும் வகையில் செய்ய வேண்டும்." என்றார்.


கருப்பையாவிற்கு சால்வை அணிவித்து பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், "தனது சொத்துக்களை எல்லாம் கட்சிக்கு கொடுத்து பெருமை சேர்த்த தலைவர்களின் வரிசையில் கருப்பையாவும் இடம் பெறுகிறார். கருப்பையா தன்னை மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.


"நம்மிடம் உள்ள நியாய உணர்வுகளையும், ஆவேசத்தையும் சமுதாயத்தின் உணர்வாக, ஆவேசமாக மாற்ற முயற்சிக்கிறோம். அந்த மக்களின் உணர்வுகளை புரிந்து அவர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். அந்த மக்களின் உணர் வுகளையும் உணர்ச்சிகளை யும் ஒருங்கிணைக்கின்ற பணி யை இந்த அலுவலகம் செய்யும்" என்றும் அவர் கூறினார்.

No comments: